pic file copy
கவரப்பேட்டை, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.எஸ்.ரோடு அமைந்துள்ள பகுதியில் கார்த்திகேயன் என்பவரின் மனைவி ரம்யா வயது 28 தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கார்த்திகேயன் செண்ட்ரிங்க் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ நாளான நேற்று பிப் 28 ஆம் தேதி காலை 9 மணியளவில் கவரப்பேட்ட்டை ஜங்ஷன் அருகே வேலை செய்வதற்காக ரம்யாவின் கணவர் கார்த்திகேயன் ராஜூ என்பவருடன் சென்றுள்ளார்.
அங்கு காலை 10,30 மணியளவில் திடீரென கார்த்திகேயன் மயங்கி விழுந்துள்ளார். அது குறித்து தகவலறிந்த அவரது மனைவி ரம்யா சம்பவ இடத்திற்கு சென்று கணவனை ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார். எனக் குறிப்பிட்டுள்ளார். என இவ்வாறு கார்த்திகேயனின் மனைவி ரம்யா கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவனின் உடல் கும்மிடிப்பூண்டி மருத்துவமனை சவகிடங்கில் உள்ளது. அவரது உடலை குல வழக்கப்படி அடக்கம் செய்ய வேண்டியுள்ளதால் உடலை பெற்றுத் தரும்படியும் அம்மனுவில் தெரிவித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.