திருவள்ளூர், மார்ச். 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர் மாவட்டம், கடந்த 2023-ம் ஆண்டு காணாமல் போன செல் போன்கள் குறித்து குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெறப்பட்ட  புகார்களின்  பேரில்,   திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி சுமார் ரூ.23,10,000/- மதிப்புள்ள 154 செல்போன்களை கண்டறிந்து மீட்கப்பட்டு 15.03.2024 தினமான இன்று உரியவர்களை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் செல்போன்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கபட்டது.

மேலும் இந்நிகழ்வின் போது கூடுதல் கண்காணிப்பாளர் ஹரிகுமார் மற்றும் மீனாட்சி உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here