கும்பகோணம், பிப். 10 –

தம்பட்டம் செய்திகளுக்குகாக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள தென்னக திருப்பதி என போற்றபடுவதும், 108 வைணவ திருக்கோயில்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் எனப்போற்றபடும் அருள்மிகு ஸ்ரீவேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் தை மாத திருவோண நன்னாளை முன்னிட்டு பொன்னப்பரும், பூமிதேவி தாயாரும் அலங்கார தெப்பத்தில் எழுந்தருள, பகலிராப்பொய்கை திருக்குளத்தில் நேற்றிரவு தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது, அக் கண் கொள்ளாக் காட்சியினை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தெப்பத்தில் தாயாருடன் உலா வந்த பெருமாளை நான்கு கரைகளில் இருந்தும் தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா அமைந்துள்ள தென்னக திருப்பதி என போற்றப்படுவதும், 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றான மேலும் தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களிலேயே மிகச் சிறப்புடைய தலமாகவும் விளங்கும் தென்னக திருப்பதி, திருவிண்ணகர் என போற்றப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலாகும்  மூலவர் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், தாயார் பூமிதேவி வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும், மார்கண்டேய மகரிஷி அமர்ந்து கன்னிகாதானம் செய்யும் கோலத்திலும் அத்திருக்கோயிலில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

இத்தகு சிறப்பு பெற்ற வைணவ தலத்தில் தை மாத திருவோண நன்னாளை முன்னிட்டு இன்றிரவு பல வண்ண பட்டு வஸ்திரங்களாலும், பல வண்ண நறுமண மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பெருமாள், பொன்னப்பரும், பூமிதேவி தாயாரும் மின் விளக்குகளால் வடிவமைக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் எழுந்தருள, நாதஸ்தவர மேள தாள மங்கல வாத்தியங்கள் ழுழங்க, பகலிராப்பொய்கை திருக்குளத்திற்குள் மும்முறை உலாவர தெப்போற்சவம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

அக் கண் கொள்ளா காட்சியினைக் காண ஏராளமான பக்தர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டு தெப்பத்தில் தாயாருடன் உலா வந்த பெருமாளை நான்கு கரைகளிலும் இருந்தபடி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here