தஞ்சாவூர், மே. 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள்  காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு ஆதரவான வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி சட்டவிரோதமாக நிறைவேற்றிய தீர்மானத்தை  கண்டித்தும், தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

பின்னர்  தீர்மான நகலை எரித்து போது காவல்துறையினர் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது

Byte

P R பாண்டியன்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here