திருவாரூர், மே. 06 –

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பதாம் ஆண்டு விழாவினை இன்று அக்கட்சியின் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அக்கட்சியினர் அப்பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களில் அக்கட்சியின் புதிய கொடியினை ஏற்றியும், பெரியார் அண்ணா ஆகியோரின் திருவுருவச்சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வீதிகளில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மிக சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடினார்கள். திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூடூரில் அக் கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி துணைச்செயலாளர் ஆரூர் சீனிவாசன் ஏற்பாட்டில் அக்கட்சி கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது.

மேலும் தொடர்ந்து, திருவாரூர் நகரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள மேம்பாலத்தில் திருவாரூர் நகர மதிமுக செயலாளர் எஸ் கபிலன் தலைமையில் புதிய அக்கட்சிக் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்பு, திருவாரூர் ஒன்றியம் கீழக்காவாவது ஊராட்சி சேந்தமங்கலத்தில் திருவாரூர் ஒன்றிய மதிமுக செயலாளர் டி ஆர் தமிழ்வாணன் தலைமையில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி வாழ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் அக்கட்சியினர் கொண்டாடினார்கள்.

இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட மதிமுக செயலாளர் ப பாலச்சந்திரன் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் ஆரூர் சீனிவாசன் மாநில கலைத்துறை துணை செயலாளர் எஸ் ஜெயராமன் மாவட்ட துணை செயலாளர் செந்தில் முருகன் திருவாரூர் ஒன்றிய செயலாளர் டி ஆர் தமிழ்வாணன் திருவாரூர் நகர செயலாளர் கபிலன் பொதுக்குழு உறுப்பினர்கள் அலிவலம் ராஜ் மண்ணை மீனாட்சிசுந்தரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் T.ஹரிராஜன் ஒன்றிய அவைத் தலைவர் வெங்கட்ராஜுலு எல் ஐ சி கிருஷ்ணன் கீழகாவதுகுடி கிளை செயலாளர் ராமலிங்கம் மூத்தவர் ராமச்சந்திரன் இளைஞர் அணியினர் ராஜ்மோகன் சுதர்சன் அம்பரஞ்சித் பிரசன்னா ரிபாஸ் மற்றும் மதிமுக கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here