மயிலாடுதுறை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறை தெற்கு ஒன்றியத்தின் சார்பில், செருதியூர் கிராமத்தில், அலங்கரிக்கப்பட்ட காடுவெட்டி குருவின் உருவப்படத்திற்கு, பா.ம.க தெற்கு ஒன்றிய செயலாளர் மதிவானன் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இது போல், அச்சுத ராயபுரம், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி ஆகிய இடங்களிலும், அங்கு வைக்கப்பட்டிருந்த வன்னிய சங்க தலைவர் காடுவெட்டி குருவின் உருவ படத்திற்கு பா.ம.க.வினர் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம். பா.ம.க ஊடக பிரிவு செயலாளர் நரேந்திரபாலா, , பழனிவேல், மனி கண்டன், சேதுராமன் என பா.ம.க வினர் பெருமளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்