செங்கல்பட்டு, ஏப். 18 –
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம். மேலும் அவ்வலுவலகத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக அதிக அளவிலான லஞ்சம் வாங்கப்படுவதாக தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் தடுத்தல் துறையினருக்கு தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரினை தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அத்துறையைச் சார்ந்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் அவ்வலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் இச்சோதனையின் போது, 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின்சாரதுறை அதிகாரிகள் பயன்படுத்தி வரும் அரசு மற்றும் தனியார் வாகனங்களையும் அவர்கள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.