தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய திருடனை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மறைவான பகுதியில் பயணி ஒருவர் சிறுநீர் கழித்து கொண்டு இருந்தார்.
அப்போது அவர் அருகில் நின்று சிறுநீர் கழித்து கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் திடீரென பயணியின் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிய போது, திருடன் திருடன் என பயணி போட்ட கூச்சலை அடுத்து பேருந்து நிலையத்தில் நின்று இருந்தவர்கள் திருடனை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தஞ்சை நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா பொதுமக்களிடம் இருந்து திருடனை மீட்டு அவன் திருடி வைத்து இருந்த செல்போனை பயணியிடம் ஒப்படைத்துவிட்டு செல்போன் திருடனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்
விசாரணையில் தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த தனுஷ் (24) என்பதும் ஒரு கும்பலாக சேர்ந்து தனியாக வரும் பயணியிடம் செல்போன் பறிப்பது தொடர்கதையாக செய்து வருவதும் தெரியவந்தது இதனை அடுத்து செல்போன் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.