தஞ்சாவூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் மத்திய அரசைக் கண்டித்து தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நெல் கரும்பு கோதுமை உள்ளிட்ட விளை பொருளுக்கான உரிய விலையை அறிவிக்க வேண்டும் மேலும் அதனை சட்டமாக்க வேண்டும் என தொடர்ந்து டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது மத்திய அரசு கொலை வெறி தாக்குதல் நடத்தி கொலை செய்வதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என முழக்கமிட்டு ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் தலையில் காயத்திற்கு போடும் கட்டுபோல் அக்கட்டுகளை தலயிலும் கை மற்றும் கால்களிலும் கட்டிக் கொண்டு போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அழைத்து பேசி விவசாய உற்பத்தி பொருளுக்கு உரிய விலையை அறிவிக்க வேண்டும், விவசாய கடன் மற்றும் மாணவர்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் , இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் கடுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் பயிர் காப்பீடு கணக்கெடுப்பு உடனடியாக தொடங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும், விவசாயிகள் தாக்கப்பட்டதை சித்தரிக்கும் வகையில் நெற்றி மற்றும் கைகளில் காயக்கட்டுகள் கட்டி நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.