புதுச்சேரி, மே. 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே  ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று தரிகட்டு ஓடி வந்து சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் உள்ள சிடிடிவி பதிவாகி தற்போது அக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியைச் சார்ந்தவர் துரைராஜ். இவர் கடலூரில் இருந்து பெருமுக்கல் கிராமத்தில் உள்ள குவாரிக்கு மணல் ஏற்ற இன்று அதிகாலை கடலூரில் இருந்து வானூர் மார்க்கமாக புதுச்சேரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, தரிகட்டு ஓடி சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

அதில் லேசான காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார். மேலும் அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here