ஊத்துக்கோட்டை , ஏப்- 11

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ….

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு  ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை  ஆதரித்து பூண்டி வடக்கு ஒன்றிய திமுகச் செயலாளர் வழக்கறிஞர் ஜான் என்கிற பொன்னுசாமி  தலைமையில் அரசு பேருந்தில் பயணம் செய்தும் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்யும் விவாசாயிகளுடன் வேலை செய்தும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் மேலும் தமிழக முதல்வரின் இரண்டரை ஆண்டுகால சாதனைகளை விளக்கி கூறியும் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர். மேலும் காங்கிரஸ் மற்றும் திமுகவின் நாடாளுமன்ற 2024 தேருதல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தும் மக்களிடையே வாக்கு சேகரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.ஜே.ஜி. மனோஜ் என்கிற தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் வெற்றி பெற்றால் நூறு நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மற்றப்பட்டு கூலி உயர்த்தப்படும் என கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழச்சியில் மாவட்ட பொருளாளர் ரமேஷ் பூண்டி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன் ராகவன் ஸ்ரீதேவி நாகபூஷன் மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசலு  நாகராஜ் ரகு அமைப்புசாரா ஓட்டுனர் அணி டிஆர்கே. வாசு இலக்கிய அணி துணை அமைப்பாளர் கஜேந்திரன்  கழக நிர்வாகிகள் பாலசுப்ரமணியம் சரசு பூபாலன் பரந்தாமன் பிரபாகரன் வழக்கறிஞர் சாய்குமார் நவீன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு கை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here