கும்பகோணம், நவ. 14 –

கும்பகோணத்தில் பல பெண்களை காதல் வலை வீசி ஏமாற்றிய நபரை பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் சமயோசிதமாக திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக சென்று அவனை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கும்பகோணத்தில் நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்த அந்தப் பெண் பெற்றோரை இழந்து உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார் அங்கு தியாகராஜன் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் தியாகராஜனின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில்  அதில் அவன் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தியாகராஜனிடம் கேட்டபோது மழுப்பிய தியாகராஜன் அவரிடமிருந்து விலக  முயன்றுள்ளார். இது குறித்த பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வர தியாகராஜனை மடக்கிப் பிடித்து நாகேஸ்வரன் கோவில் அருகில் உள்ள  மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

 திருமணம் செய்த கையோடு மாலையும் கழுத்துமாக தியாகராஜனை மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் துறையிடம் ஒப்படைத்தனர். தியாகராஜனிடம் காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here