பெரியபாளையம், செப். 17 –

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையத்தில் அமமுக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்திற்கு பொன்னேரி நகர செயலாளர் வரவேற்புரை நிகழ்த்த, மீனவர் அணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம், .கழக அமைப்புச் செயலாளர் தட்சிணாமூர்த்தி,. மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராம்குமார், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மன்சூர்அலி, .அன்பு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் சுரேஷ், பூண்டி ஈஸ்வரன், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்கள் வாசு, .சூர்யா,. ஆரணி நகர செயலாளர் தன்ராஜ், மற்றும் .சோழவரம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர்கள் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

மேலும் இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொறுப்பாளர்கள் அமமுக வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தினை வெகு சிறப்பாக தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறோம் என்றும், அராஜகத்தின் உச்சியில் உள்ள திமுகவையும், சின்னம்மாவின் தலைமை ஏற்காத அதிமுகவையும் அடியோடு ஒழித்து, 2024 ஆம் ஆண்டு நடைப்பெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக அதிக இடங்களில் வெற்றிப்பெறும் என்றும், மேலும் இந்நேரத்தில் அதற்கான உறுதியேற்று கட்சிபணிகளை செவ்வனே செய்திடுவோம் என தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.

இக்கூட்டத்தில் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் சதீஷ் ,மாவட்ட கழக நிர்வாகிகள் பானுமதி, அங்கன்கோபி, ரகுபதி, பாண்டியம்மாள், கிஷோர் குமார், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கோடீஸ்வரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜாதாஸ் ,சற்குணம், ஜான்சன் ரகுரவிக்குமார், குமரேசன் பழனி இந்திரேஷ் பாபு ,சங்கீதா,ஞான செல்வி ,சாந்தகுமார், மஸ்தான், ரேகா தொழிற்சங்க பிரிவு செயலாளர் மகேந்திரன், மொரட்டுர் விக்னேஷ் உள்ளிட்டவர்களும், திரளான தொண்டர்களும் மற்றும் அப்பகுதி வாழ் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து இவ்விழாவில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் மாலதி நன்றியுரை நிகழ்த்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here