தஞ்சாவூர், ஏப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறுப் பகுதிகளில், கோடை வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மற்றும் மோர் பந்தலை, அ.தி.மு.க தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் RK.பாரதி மோகன் ex MP- துவக்கி வைத்தார்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் பேரூர் அதிமுக சார்பில்   கோடை வெப்பத்தை தனிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில், அ.தி.மு.க.. தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் RK.பாரதி மோகன்ex M.P கும்பகோணம் சோழபுரம் திருவிடைமருதூர் திருப்பனந்தாள் ஆகிய பகுதிகளில்  இன்று தொடங்கி வைத்தார்.

நீர்மோர் பந்தல் தொடக்க நாளையொட்டி பொதுமக்களுக்கு, வெள்ளரிக்காய், தர்பூசனி , சர்பத், நீர் மோர் இளநீர்ஆகியவைகள் வழங்கபட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு திருப்பனந்தாள் பேரூர் நகர கழக செயலாளர் ஜி மூர்த்தி, மற்றும் அ.தி.முக   ஒன்றிய பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் மக்களை வாட்டுவதால், பொதுமக்கள் பெருமளவில் ஆர்வத்தோடும், தாகத்தோடும், அ.தி.மு.க வழங்கும் நீர்மோர் பந்தலில் தாகத்தை தனித்து சென்றது. காண்போரை கோடை காலத்திலும் கண் குளிர வைத்தது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here