லட்சுமிநகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 13-வது தென்மண்டல எறிப்பந்து போட்டி சென்னை நங்கநல்லூர் லட்சுமிநகர் 7-வது தெருவில் உள்ள மைதானத்தில் நடந்தது.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழக ஆண்கள் அணி இறுதிப்போட்டியில் 15-11, 12-15, 15-7 என்ற கணக்கில் கர்நாடகாவையும், பெண்கள் அணி 15-2, 15-9 என்ற கணக்கில் கேரளாவையும் வீழ்த்தியது. தமிழகத்தை சேர்ந்த திவ்யதர்ஷினி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷனர் எம்.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சுங்க இலாகா துணை கமிஷனர் கே.பி. ஜெய்கர், போட்டி அமைப்பு குழு செயலாளர் எம்.அழகேசன், தமிழ்நாடு எறிப்பந்து சங்க பொதுச்செயலாளர் டி.பாலவினாயகம், தொழில் அதிபர் பரணி பிரசாத், ஹென்றி பிரசன்னகுமார், ஹரிசந்திரன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here