PIC File copy

ஆர்.கே.பேட்டை, மார்ச். 14 –

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டைப் பகுதியில் உள்ள செல்லாத்தூர் காலனியில் மணிகண்டன் என்பவரின் மனைவி ஐஸ்வர்யா வயது 31 தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந் நிலையில் ஐஸ்வர்யாவின் 12 வயது மகளை அதேப் பகுதியில் வசிக்கும் பொன்னுரங்கம் என்பவரின் மகன் சந்துரு முகநூல் பக்கத்தில் ஐஸ்வர்யாவின் 12 வயது மகளின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். அதனை தட்டிக்கேட்கும் விதமாக ஐஸ்வர்யா மற்றும் அவர்களது உறவினர் சம்பத் என்பவரின் மனைவி மணியம்மாள் என்பவருடன் ஆகியோர் சென்று அதுப்பற்றிக் கேட்கும் போது, சந்துரு மற்றும் அவருடன் சேர்ந்து 11 பேர் கொண்ட கும்பல் அவர்கள் இருவரையும் கட்டையால் தாக்கியும் கொலை மிரட்டலும் விட்டுவுள்ளனர்.

அதில் ஐஸ்வர்யாவின் உறவினர் மணியம்மாள் வயது 58 என்பவருக்கு இரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ஆர். கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் சந்துரு, பிரபு வயது 40, விஜயன், சிவா, பொன்னுரங்கம், கருணா, சேகர், தேவி, விஜயா, ஜான்சி, ராஜேஸ்வரி, பாபா, ஆகிய 12 பேர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

அதுப் போன்றே இந்த வழக்கு தொடர்பாக சந்துரு தரப்பில் அவரது பெரியப்பா மகன் குமார் என்பவரின் மகன் பிரபு வயது 40 என்பவர் ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப் பட்டுள்ள புகாரில் தனது சித்தப்பா மகன் சந்துரு நடந்து சென்று கொண்டிருக்கும் போது முன் விரோதம் காரணமாக அதேப் பகுதியில் வசிக்கும் சம்பத் என்வரின் மகன் மணிகண்டன் வயது 35 முருகன், அக்னி பிரசன்னா, படவேட்டன், சம்பத், சத்தியவாணி, ஐஸ்வர்யா, ராஜா, அருண், பிரமோகித், முன்சிப், ஆகிய 11 பேர்களும் சேர்ந்து சந்துருவை கரும்பு தோட்டதிற்குள் தூக்கிச் சென்று கம்பால் அடித்தும் கொலை மிரட்டல் விட்டும் காரைச் சேதப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். அவரளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 11 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,  இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து மேற்படி சட்ட நடவடிக்கைகளை ஆர்.கே பேட்டை காவல் நிலைய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here