கும்கோணம், ஜூன். 06 –

கும்பகோணம் வளையபேட்டை மாங்குடி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் தாயாரும் மற்றும் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் சகோதரியுமான சந்திர அம்மாள் படத் திறப்பு விழா நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று சந்திர அம்மாள் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாத்திமா புரம் 25வது வார்டு விடுதலை சிறுத்தை கட்சியின் கும்பகோணம் மாமன்ற உறுப்பினர் ரூபின்ஷா அலெக்ஸ்  அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன் விவசாய அணி மாநில செயலாளர் வெண்மணி திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் திமுக பம்பபடையூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்து மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான விசிக கட்சியனர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here