பொன்னேரி, மார்ச். 31 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகர் பகுதியில் சென்னை முகப்பேர் இஸ்லாமிய நூலகம் சார்பில் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை .மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய மசூதி பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர் முஹம்மத் நஸ்ருல்லா தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மஸ்ஜித் மதரஸா ரியாழஸ் ஹீதா. மாதவரம் மஸ்ஜித் ஜமாலியா மதரஸா மஹபூப் பாஷா ஹஜ்ரத். தலைவர் முஹம்மத் இர்பான்சாஹிப். இஞ்சீனியர் ஜைனப்ஆரிப் அஹமத். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட அரசுகாதீப் மவுலானா மவுலவி, அல்ஹாஜ், முகமதுஅலி, மன்பைஅலி ராஹ். கலந்துகொண்டு அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களும் மற்றும் 40 நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் திரளான கிராம மக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.