திருவாரூர், செப். 27 –

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் கிறிஸ்தவர்களை சுதந்திரமாக ஊழியம் செய்ய அனுமதிக்க வேண்டும். உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி மனுவினை வழங்கினார்கள்.

தமிழ்நாட்டில் பூட்டப்பட்ட சபைகள் திறக்கப்பட வேண்டும். சபைகள் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சபை போதகர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும். கல்லறை தோட்டத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பட்டா இல்லாத சபைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். கிறிஸ்தவர்களை சுதந்திரமாக ஊழியம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் விடுதலையோடு ஆராதிக்க முதல்வர் சட்டசபையில் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர  வலியுறுத்தி அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் மனுவினை வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது ஏராளமான கிறிஸ்துவ சபைகளின் மத போதகர்கள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here