மீஞ்சூர், டிச. 21 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் இரயில் நிலையங்களில் வரும் மின்சார ரயிலில் சிறு வியாபாரம் செய்யும் மாற்று திறனாளிகள் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்புக்குள்ளாயினர்.
அதனால் தினசரி பணிக்கு செல்ல முடியாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தவர்களை அப்பகுதி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்மற்றும் பொறுப்பாளர்கள் திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டத்திற்கு தெரியபடுத்திய தகவலை அறிந்து அம்மாவட்டதலைமையில் சார்பில் அச் சிறு தொழிலில் ஈடுப்பட்டு வந்த 30 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மீஞ்சூர் இரயில் நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட செயலாளர் தேசிங்குராஜன், துணைச் செயலாளர் சண்முக பிரியன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பரசு, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்கள் காந்தி, ஜெயகாந்தன், மீஞ்சூர் நகர செயலாளர் தொழிலாளர் அணி தமிழ் குமார், வட்ட செயலாளர் கமல்ராஜ் உள்ளிட்டோர் இணைந்து வழங்கினார்கள்.