பண்ணைக்காடு, ஜன. 20 –

பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் இவர் காபிதோட்டத்தில் வேலை செய்யும் கூலித்தொழிலாளி ஆவர், சம்பவத்தான இன்று  முளையூர் வழியாக காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளி முருகவேலை புதருக்குள் பதுங்கியிருந்த காட்டு எருமை மாடு அவர் மீது பாய்ந்து தாக்கியதில் அவர் கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அருகிலிருந்தவர்கள் காட்டு எருமை தாக்குதலில் இருந்து மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். தற்போது பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பொது மக்களின் சார்பாக வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து  பட்டா நிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர், மேலும் காயம் அடைந்துள்ள விவசாய கூலித்தொழிலாளிக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டுமென்று காயமடைந்தோர் உறவினர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here