பழவேற்காடு, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ள திருப்பாலைவனம் கிராமத்தில் ஃபெடரல் வங்கியின் 250 ஆவது கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் திருப்பலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு புதிய வங்கிக் கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் அதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து வைத்தார். சென்னை மண்டலம், ஃபெடரல் வங்கி துணைத் தலைவர்-II & மண்டலத் தலைவர், பெட்டி ஆண்டனி அச்சிறப்பிகு விழாவிற்கு தலைமை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் தாங்கல் பெரும்புலம் ஞானவேல், கோட்டைக்குப்பம் சம்பத், லைட் ஹவுஸ் கஜேந்திரன், பழவேற்காடு மீனவ கூட்டுறவு விற்பனை அங்காடி சங்க தலைவர் அரங்கம் நாராயணன், திருவள்ளுர் மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு. முதன்மை நிர்வாகி பெர்னாட் உள்ளிட்டோர் அச்சிறப்பு மிகு விழாவில் பங்கேற்று மேலும் அவ்விழாவிற்கு சிறப்புச் சேர்த்தனர்.