கும்பகோணம், செப். 18 –

கும்பகோணம் அருகே உள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான, ஒப்பிலியப்பன் திருக்கோவிலில் பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டி சிறப்பு பூஜை மற்றும் பிராத்தனை செய்து, திருநாகேஸ்வரம் நகர பாஜக வினர் தங்க ரதம் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

ஒப்பிலியப்பன் கோயில், ஸ்ரீ வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில், 108 வைணவலத் தலங்களில் ஒன்றானதும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தகைய பெருமைமிகு தலத்தில், திருநாகேஸ்வரம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், நேற்று மாலை பிரதமர் நரேந்திரமோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நீடோடி நலமுடன் வாழ வேண்டும் என சிறப்பு பிராத்தனை செய்து, உற்சவர் பொன்னப்பர் பூமிதேவி தாயாருடன், தங்க ரதத்திற்கு எழுந்தருள, தீபாராதனை செய்து, தங்க ரதம் பிரகார உலா தொடங்கியது.

தொடர்ந்து திருநாகேஸ்வரம் பாஜக நகர தலைவர் உப்பிலிராஜ், ஒன்றிய தலைவர் சரவணன், ஒன்றிய பொதுச்செயலாளர் உப்பிலிதம்புடு, மாவட்ட பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், மாவட்ட ஆலயப்பிரிவு மாவட்ட தலைவர் மாத்தூர் கணேசன் உள்ளிட்ட ஏராமானவர்கள் இதில் கலந்து கொண்டு தங்கரதத்தினை இழுத்து வழிபட்டனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here