மீஞ்சூர், ஏப். 26 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் புனித ரமலான் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு 10 கிலோ அரிசி 5 கிலோ மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்சியில்  சுமார் 200 பேருக்கும் மேற்பட்ட பயனாளிகள்  இந்த உணவு பொருட்கள் தொகுப்பினை பெற்று பயனடைந்தனர். இத்தொகுப்பினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் மீஞ்சூர் சிக்கந்தர், பொது சபை செயலாளர் சைய்யதுஅலி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் காஜா மொய்தீன், மாவட்ட யூத் லீக் அப்துல் காதர், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் ரசித், நகர தலைவர் உசேன் சாகிப், நகர செயலாளர் ஹவீப் முகமது, 2வது வார்டு செயலாளர் ரியாஸ் அகமது உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வருகை புரிந்த அனைவருக்கும் தொகுப்பினை வழங்கினார். மேலும் நிகழ்வில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here