திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் சாஎய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில், ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஸவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்ற பின், தொடர்ந்து.. மாங்கல்ய தாரணம் எனும் அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து, பூர்ணாஹூதியுடன் ஆனந்தவல்லி தாயாருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து ஒன்பது வகையான மஹா தீபாராதனைகள், பஞ்ச ஆரத்தி காண்பிக்க பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கோ பூஜை, அஸ்வமேத பூஜை, கஜ பூஜை நடைபெற்றது.. மேலும்.. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வில் வெற்றியடைய வேண்டியும், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைத்திடவும், அனைத்து காரியங்களும் வெற்றியடைந்து செல்வம் செழித்தோங்க வேண்டியும் சிவாச்சாரியார்கள் பிராத்தனை செய்து வழிபாடு நடத்தினர்.
பேட்டி: ஹரிஹர சுத சிவாச்சாரியார்,
(ஸ்ரீஆனந்தவல்லி கைங்கரிய சபா )
செம்மங்குடி