சென்னை, ஜன. 3 –

சென்னை அருகே திருமணமான இளம் பெண் கழுத்தை நெரித்து கொலை. செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சயின்ஷா (26) இரண்டு திருமணம் நடந்து இரு கணவர்களையும் இழந்த நிலையில் தனது 12 வயது மற்றும் 7 வயது இரண்டு மகன்கள் மற்றும் சாயின்ஷாவின் தாயருடன் கடந்த பத்து தினங்களாக இப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

 இவர் ஏற்கனவே கண்ணகி நகரில் வசிக்கும் போது, இவருக்கு முதல்  திருமணம் முடிந்து உள்ளது. அப்போது பல்வேறு ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும், முதல் குழந்தை இவருக்கு பிறந்த நிலையில் கணவர் இறந்து விட தனியாக வசித்து வந்த நிலையில் மற்றொரு திருமணம் செய்துள்ளார். அவருடன் ஒராண்டுக்கு மேல் வாழ்ந்த நிலையில் அவருக்கும் ஒரு மகன் பிறந்ததாக விசாரணையில் தெரிய வருகிறது. அவரும் சிறிது காலத்தில் இறந்து விட

தற்போது தாய் மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாவதாக சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்தது மேலும், போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பிய சாயின்ஷாவின் தாய் தனது மகள் துப்பாட்டவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து சாயின்ஷாவை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, தகவலின் பேரில் விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் சயின்ஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

பின்னர் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் இருந்து தடையங்களை சேகரித்தனர். மேலும் கேளம்பாக்கம் போலீசார் இக்கொலைக் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்நிலையில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை கொலை செய்யப்பட்டிருந்த சாயின்ஷாவின் கள்ளக்காதலன் சென்னையை சேர்ந்த காத்திக் நேற்று வீட்டிற்கு வந்து சென்றதும், பின்னர் அவரது செல்போன் ஸ்சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதையும் அறிந்த போலீசாரின் சந்தேகம் கார்த்திக் மீது வலுத்துள்ளது. மேலும் சாயின்ஷாவின் தாய் மற்றும் இரு மகன்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் கார்த்திக்கை கேளம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here