செங்கல்பட்டு, செப் . 25 –

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் வெடித்து விபத்துக்குள்ளானது.

அதிகளவிலான புகை வெளியேறி வருவதால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரம். மேலும் கதிரியக்க அபாயம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அனைவரும் வெளியேறி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

போதிய தீயணைப்பு உபகரணங்கள் மருத்துவமனையில் இல்லாததால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு. லாரி மூலம் எம்சாண்ட் மணலை கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here