பாண்டிச்சேரி, பிப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் செய்தியாளர் சம்பத் …

புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை வெளியிட்டு வணிக நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை வெளியிட்டதற்கும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்கின்ற வகையில் வணிக நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி மூலக்குளம் எம்ஜிஆர் நகர் பகுதியில் இருந்து தொடங்கிய அப் பேரணியை, வணிகர் கூட்டமைப்பு பெருந்தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். அதில் வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் பாபு உள்பட வணிகர் கூட்டமைப்பு நிர்வாகிகள், வியாபாரிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மாநிலம் முழுவதும் பேரணியாக சென்றனர்.

*பேட்டி: சிவசங்கர், எம்.எல்.ஏ., பெருந்தலைவர், வணிகர்கள் கூட்டமைப்பு.*

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here