திருவள்ளூர், மே. 31 –

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்பாக செயலாற்றி வரும் லாரன்ஸ்- மஞ்சுளா தம்பதியரின் மகள் பிரசன்னாவுக்கும் மாதரப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் – டெலீசா ஆகிய தம்பதியரின் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இத்திருமண விழாவில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கத் இருந்தார் இந்நிலையில் பணி நிமித்தம் காரணமாக திருமண விழாவில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மணமக்களை மாநெல்லூரில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர் லாரன்ஸ் இல்லத்திற்கு நேரில் சென்ற பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து பின்னர் ஆசிர்வதித்தார்.

இந்நிகழ்வின் போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டிஜே கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சாரதாம்பாள் முத்துசாமி மற்றும் கழக நிர்வாகிகளும் கட்சித் தொண்டர்களும் திரளாக பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here