கும்பகோணம், டிச. 9 –

கும்பகோணத்தில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்க்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் வீரவணக்கம் செலுத்தினார்கள்.

கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அவருடன் அவரது மனைவி மற்றும் 13 ராணுவ உயர் அதிகாரிகள் பலியானதை தொடர்ந்து அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் பாலா  தலைமையில் அஞ்சலி செலுத்தினார்கள். 

இதில் நகர செயலாளர் பிரபாகரன் சிவசேனா கட்சி மண்டல பொறுப்பாளர் வேல்முருகன் மாவீரன் மஞ்சள் படை மாவட்ட செயலாளர் பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here