கும்பகோணம், மார்ச். 26 –

கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, ‘பி’ சான்றிதழ் பெறுவதற்கான, செய்முறை தேர்வு இன்று துவங்கியது 8 மண்டலத்திற்குட்பட்ட, 11 கல்லுாரிகளை சேர்ந்த, 434 மாணவர்கள்,  மாணவியர் இச்சான்றிதழ் தேர்வில் பங்கேற்கின்றனர்.

தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, ‘பி’ சான்றிதழ் பெறுவதற்கான, செய்முறை தேர்வு இன்று  நாளையும் நடைபெறுகிறது. இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட, 8 மாவட்டத்திலிருந்து 11 கல்லுாரிகளை சேர்ந்த, 434 மாணவ,  மாணவியர் இச்சான்றிதழ் தேர்வில் பங்கேற்கின்றனர்.

இத்தேர்வு பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மற்றும் பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி என இரு இடங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று துவங்கும் செய்முறை தேர்வில், அணிநடை பயிற்சி, ஆயுதங்கள் கையாள்தல், வரைப்படங்கள் அறிதல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ், மாணவர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்துவர்.

நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வு எழுதி, ஓராண்டுக்கு பின், ‘சி’ சான்றிதழ் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விலும் வெற்றி பெற்றால், ராணுவப்படையில் சேர தகுதி பெறுவர். சான்றிதழ் பெற்றவர்களுக்கு, எழுத்துத்தேர்வு இன்றி, நேரடியாக நேர்முகத்தேர்வு மூலம் ராணுவத்தில் சேவை புரிய வாய்ப்பு கிடைக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பயிற்சி திருச்சி 2வது அணி தலைவர் கர்னல் கோசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் 4வது பெண்கள் அணி தலைவர் எம் என் துபே 8வது அணி சுபேதார் மேஜர் பிரைட் வழி நடத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here