கும்பகோணம், டிச. 19 –

கும்பகோணம் அருகே சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் மீனாட்சி மருத்துவமனை ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம்  நடைபெற்றது.

கும்பகோணம் அருகே சிற்றிடையநல்லூர் ஊராட்சியில் மீனாட்சி மருத்துவமனை ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும்  இலவச கண் சிகிச்சை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை அதிமுக முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் இதயம் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் தீர்வு சர்க்கரை நோய் பரிசோதனைகள் சளி இருமல் காய்ச்சல் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஈசிஜி கொழுப்பு சிறுநீரகம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. கொரோனா பரிசோதனை ரத்தக் கொதிப்பு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர். தொடர்ந்து கண் சிகிச்சை முகாம் பரிசோதனை செய்ததில் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு 50 சதவிகித கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here