செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் செல்லம் நகரில் வசித்து வருபவர் சங்கர் இவர் வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். உறவினரைப் பார்க்க மருத்துவ மனைக்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், தங்கம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள் என கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் வியப்பில் உள்ளனர்
கும்பகோணம், செப் . 7 –
திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் மெயின் ரோட்டில் செல்லம் நகரில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் கட்டிட பணியாளராக பணியாற்றி வருகிறார் . சில நாட்களுக்கு முன்பு தான் இங்கு வந்துள்ளார்.
தனது அண்ணன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் உடல் நிலைக் குறித்து அறிவதற்காக வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றுள்ளார். இந் நிலையில், நேற்று மாலை வீடு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியதை தொடர்ந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளது. வீட்டினுள் இருந்த ஆறு கிராம் தங்கத்தோடு, முக்கால் கிலோ வெள்ளி பூஜை பொருட்கள், 10 கிலோ எடையுள்ள பித்தளைப் பொருட்கள் மற்றும் பீரோவில் இருந்த 22 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து சோழபுரம் காவல்நிலைத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.