மீஞ்சூர், மே. 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,  மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.

கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற பொருட்களை தேமுதிக மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தேமுதிக மாநில இளைஞரணி செயலாளரும், முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான நல்லதம்பி திறந்து வைத்தார்.

அந்நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், குமரேசன், ஜாகிர் உசேன், ஒன்றிய நிர்வாகிகள் பிரகாஷ், வாசகர், சுப்பிரமணி, சுதாகர், ராஜா, கார்த்திக், கிளை செயலாளர்கள் குமார், கார்த்திக். ராஜ், ஹரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here