மீஞ்சூர், ஆக. 15 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
அவ்விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை வகிக்க, ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், துணை தலைமை ஆசிரியர் பிரமிளா செல்வராணி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்திரசேகரன், மற்றும் அப்பல்லோ சிஎப்எஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜ் புலித்தவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி மாணவர்களுக்கு இனிப்புகளும், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், குடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அப்பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்களும், மாணவ, மாணவி உள்ளிட்ட திரளானவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்