காஞ்சிபுரம், பிப். 26 –

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, பிப். 24 ஆம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்து, குழந்தைக்கு தேவையான பெட்டகங்களை முன்னாள் அதிமுக அமைச்சர் வி.சோமசுந்தரம் வழங்கினார்.

தமிழகமெங்கும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு நலத்திட்டங்கள், அன்னதானம், உள்ளிட்ட பல்வேறு  நலத்திட்டங்கள் வழங்கி அவரது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளன்று காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி. சோமசுந்தரம் தலைமையில் 10  பச்சிளம் குழந்தைகளுக்கு தலா 1 கிராம் எடையுள்ள 10 தங்க மோதிரங்களை பச்சிளம் குழந்தைகளின் பிஞ்சு விரலில் அணிவித்து மகிழ்ந்தனர். மேலும் அக்குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகத்தையும் பரிசாக வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here