தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடியில் பயன்படுத்த கூடிய 21 பொருட்கள் சாக்கு பையில் வைத்து 23 மண்டலங்களாக பிரித்து தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது.
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19 ஆம் தேதியான நாளை நடைபெற உள்ளதை ஓட்டி வாக்குச் சாவடியில் பயன்படுத்த கூடிய ஸ்டாம்ப், தீப்பெட்டி, பென்சில், பிளேடு, வேட்பாளர்கள் புகைப்படம், சின்னங்கள். அச்சிட்ட சுவரொட்டி உள்ளிட்ட 21 பொருட்கள் சாக்கு பையில் வைத்து 23 மண்டலங்களாக பிரித்து வாக்குச் சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் உள்ளன.