ஆரணி, டிச. 25 –
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக மிம்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கினார்கள்.
பெரியபாளையம் அருகேவுள்ள ஆரணி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பொன்னேரி வட்டக்கிளை சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி அப் பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டக்கிளை செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். சேர்மன் கோபால் முன்னிலை வகித்தார். துப்புரவுபனி மேற்பார்வையாளர் ஹரிபாபு அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கண்ணதாசன். ரகுமான் கான். சதீஷ் மற்றும் இளநிலை உதவியாளர் குப்பன். வரி தண்டலர் ரங்கநாதன் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.