தஞ்சாவூர், மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான “வொண்டர்  வேர்ல்டு தீம் பார்க்கை  திரைப்பட நடிகர் பிரபு இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். ‌ மேலும் நாளை முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக தகவல் தெரிவிக்கிறது.

.தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை-  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டியில் சுமார் 40  ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டாக  ஒண்டர் வேர்ல்டு தீ பார்க் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு   காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற குழு   தலைவர் கே.ஆர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. மேலும் இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட  நடிகர் பிரபு அத் தீம் பார்க்கை திறந்து வைத்தார்.

டெல்டா மாவட்டம் விவசாயத்தை சார்ந்த பகுதி. இங்கு புதிய முயற்சியாக பொது மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு தளமாக வொண்டர் வேல்டு அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அப்போது பிரபு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர்  துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், ,தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் ,மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். நாளைமுதல்  (13.5.24) முதல் பொது மக்கள் அனுமதிக்க பட உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here