தில்லி, சனவரி. 22 –

தில்லி சுங்கத்துறை அலுவலகத்திற்கு வந்த சில குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், தில்லி சுங்கத் துறையினர் கடந்த சனவரி –  20 மற்றும் 21 தேதிகளில் மேற்கொண்ட அதிரடி சோதனைகளில் ஈடுப்பட்டபோது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளைப் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அச்சோதனைகளின் போது மொத்தம் 12.22 லட்சம் எண்ணிக்கையிலான இ.எஸ்.எஸ்.இ, மோண்ட், டன்ஹில், டேவிடாஃப், குடாங் கரம், பிளாட்டினம் செவன் போன்ற விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிராண்ட் சிகரெட்டுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதன் முதற்கட்ட தகவலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி என தெரிய வருகிறது.

மேலும் அது தொடர்பாக தில்லி சுங்கத் தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து, கத்ரா பரியான், நயபன்ஸ், பகுதிகளில் உள்ள இரண்டு கடைகள் மற்றும் மூன்று கிடங்குகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்தக் கடைகள் மற்றும் கிடங்குகளில் பல்வேறு பிராண்டுகளின் வெளிநாட்டு சிகரெட்டுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.

அச்சிகரெட் பாக்கெட்டுகளில் அரசால் குறிப்பிடப்பட்ட சட்டரீதியான சுகாதார எச்சரிக்கைகள் எதுவும் இல்லையெனவும், மேலும் அந்த சிகரெட்டுகள் சட்டவிரோதமாக, சுங்க வரியை தவிர்த்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டு சந்தையில் விற்பக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கடத்தல் மற்றும் பதுக்கல் வழக்கில் விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினர் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவ்வழக்குத் தொடர்பாக தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுங்கத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here