சென்னை, நவ. 3 –

ஜெய் சிவசேனாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கி.இராமசுப்பிரமணி மற்றும் அதன் துணைப்பிரிவு இயக்கமான பாரதிய இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சக்தி குரு மகா சன்னிதானம் வடபாதி ஸ்ரீ முத்துகுமாரசுவாமி இணைந்து தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இணைந்து வழங்கிய வாழ்த்துச் செய்தியில் ..

இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் இந்துக்களால் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் எங்கள் சார்பிலும் ஜெய்சிவசேனா மற்றும் அதன் துணைப்பிரிவு இயக்கங்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் சார்பிலும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரும் தொற்றான கொரோனா என்னும் கொடிய நோயை வென்று மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளி திருநாளில் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசியையும் தவறாமல் செலுத்தி கொண்டு கவனமாகவும், பாதுகாப்புடனும் பசுமைப் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக இந்த தீபதிருநாளை கொண்டாட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் நம்மைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு விலகி நன்மையும, அனைவரிடமும் பரஸ்பர அன்பு மேலோங்கி இனிதாய் கொண்டாடுவோம் தீபாவளியை ..

அன்பும், அமைதியும் அகிலம் முழுவதும் தழைத்தோங்கட்டும். நம் அனைவரிடமும் வேற்றுமை எனும் வெறுப்புணர்வு மறைந்து நட்பு மற்றும் சகோதரத்துவம் சுடரொளியாய் அனைவரின் மனங்களிலும் வீசட்டும், அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும். இறைவன் அனைவருக்கும் அனைத்தும் அருள அன்பான எங்கள் வாழ்த்துக்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். என அந்த தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவத்துள்ளனர்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here