தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேகண்ட மனூர் புது ராமசந்திராபுரம் கிராமத்தில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மணிகண்டனின் நினைவாக புது ராமசந்திராபுரம் சுபாஷ் நண்பர்கள் கிரிக்கெட் குழுவினர் நடத்திய ஐந்தம் வருட கிரிக்கெட் போட்டி மாவட்ட அளவில் நடத்தப்பட்டது.
தேனி;ஜூலை,8-
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமணூர் புது இராமசந்திரா புரம் எனும் கிராமாத்தில் ஆண்டுதோறும் மறைந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் மணிகண்டனின் நினைவாக நடத்தப்பட்டு வரும் போட்டியில் சுற்றுக்கிராமங்கள் நகரங்களில் இருந்து பல்வேறு கிரிக்கெட் அணியினர் பங்கேற்று பரிசுகளைகயும் கேடயங்களையும் பெற்று செல்லும் நிலையில் இந்தாண்டு அவரின் ஐந்தாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது.
இந்த போட்டியில் சுமார் 40க்கும் மேற்பட்ட அணியினார் கலந்து கொண்ட இப்போட்டி. நான்கு நாட்கள் நடை பெற்றது. இப் போட்டியில் முதல் இடத்தை பிடித்த ராமசந்திராபுரம் சுபாஷ் நண்பர்கள் அணியினருக்கு ரூபாய் 7001 பரிசும் கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த கண்டமனூர் பிரிபேட்ஸ் அணியினருக்கு ரூபாய் 5001 பரிசும் கோப்பையும், மூன்றாம் இடம் பிடித்த பொண்ணம்மாள் பட்டி அணியினருக்கு ரூபாய் 3001 பரிசும் கோப்பையும் , நான்காம் இடம் பிடித்த சுபாஷ் நண்பர்கள் – 2 அணியினருக்கு ரூபாய் இரண்டாயிரத்து ஒன்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டிகளை காண தேனி மாவட்டத்திலிருந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசித்தனார்.
இப்போட்டிகள் அனைத்தையும் புது ராமச்சந்திரபுர சுபாஷ்கிரிக்கெட் கிராமத்து இளைஞர்கள் செய்திருந்தனர்.