கும்பகோணம், டிச. 07 –

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்,  ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத  ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர்,  ஸ்ரீ செல்லியம்மன்,  ஸ்ரீ அய்யனார்  ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர மற்றும் சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.

கும்பகோணம் மாநகரம் திருநீலக்குடி அருகில் உள்ள மேலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத, ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ அய்யனார், ஆகிய ஆலயங்களில் வளாகத்தில் நவகிரகங்கள், பைரவர், சனி, சூரியன், விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் உள்ளன. இத்தகை சிறப்பு பெற்ற ஆலயத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடைப்பெற்று பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து,  கடந்த 04 ஆம் தேதி கணபதி ஹோமம்,  நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, புனிதநீர் கொண்டு வருதலுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து, இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், அதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கடங்களில் கொண்டு வரப்பட்ட  புனித நீர் கொண்டு விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்வில் பங்கேற்க அச்சுற்று வட்டாரப் பகுதிகளை சார்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மற்றும் கோபுர தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அறங்காவலர்கள் என அனைவரும் ஒன்றுக்கூடி வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here