இந்தியா ‘ஏ’ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் மைசூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ‘ஏ’, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஈஸ்வர்ன் சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கருண் நாயர் நேற்று எடுத்திருந்த 14 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பரத் 53 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா ‘ஏ’ முதல் இன்னிங்சில் 392 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இன்று காலை 110 ரன்கள் எடுப்பதற்குள் 110 விக்கெட்டுக்களை இழந்தது.

பின்னர் இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here