பொன்னேரி, செப். 11 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல்சேகரன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் சே. ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொன்னேரி நகர செயலாளர் கோகுல் ஏற்பாடு செய்திருந்தார். மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் வஞ்சிவாக்கம் விக்ரம், சேட்டு, சரவணன் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here