திருவள்ளூர், ஆக. 11 –

திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தொண்டர் அணிக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு திமுக மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராசனிடம் வாழ்த்து பெற்றனர். அதன்படி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக தொண்டரணி புதிய நிர்வாகிகளாக தலைவர் பொறுப்பிற்கு முத்துக்குமார், துணைத் தலைவர் பொறுப்பிற்கு மாரிமுத்து, அமைப்பாளர் பொறுப்பிற்கு செல்லமுத்து என்கிற சுமன், துணை அமைப்பாளர் பொறுப்பிற்கு ச.கதிரவன், நாகராஜ் டி.ஜெகன், எஸ்.ராஜா, இ.இளங்கோ, டி.மோகன், ஜி.தியாகராஜன், எம்.சஞ்சய்காந்தி. இ.பார்த்திபன், திருப்பதி, ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் புதிய நிர்வாகிகளாக அக்கட்சியின் மேலிடம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அனைத்து பொறுப்பாளர்களும் திருவள்ளூர் கிழக்கு திமுக மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராசனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்து பெற்றனர்,

அப்போது, ஒன்றிய திமுகச் செயலாளர்கள் மணிபாலன், ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் ரமேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் முரளிதரன், ஜெயக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here