திருவள்ளூர், ஏப். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் தனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிய நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை இன்று காலை பதிவு செய்தார்.

திருவள்ளூர்  (தனி) நாடாளுமன்ற தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுயில் 10 லட்சத்து ,24 ஆயிரத்து 149 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து,61 ஆயிரத்து 457 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 385 பேர்  உள்பட மொத்தம் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 2256 வாக்கு சாவடி மையங்கள் உள்ளது. அனைத்து  வாக்குச்சாவடி மையங்களும் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்வதற்காக தயார் நிலையில் இருப்பதால் காலை முதலே அங்கு விறுவிறுப்பாக வாக்கு பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமி மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here