கும்பகோணம், ஜன. 12 –

கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கையை  அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் விரோதப் போக்கை கண்டித்தும் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும் நீட் தேர்வினால் 22 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். தமிழக அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

மத்திய அரசு தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக கல்வி துறையில் மோசமான நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த கூடாது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பு நகர செயலாளர் ஆகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அர்ஜுன் மாவட்ட குழு உறுப்பினர் சந்துரு மாநிலச் துணை செயலாளர் அரவிந்த்சாமி மாவட்ட குழு உறுப்பினர் மகாலட்சுமி மற்றும் இந்திய மாணவர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here