மணவாளன்நகர், பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன்நகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் காலனி, பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் வயது 55 இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளையமகள் செல்வி அமலா வயது 22 ஸ்ரீபெருமந்தூரில் உள்ள சேல்கம் என்ற என்ற கம்பெனியில் பணிப்புரிந்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கமாக காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து பணிக்கு கிளம்பி மாலை வீட்டிற்கு வருவதாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த பிப் 23 ஆம் தேதி அன்று காலை வழக்கமாக வேலைக்கு செல்லும் நேரத்தில் வீட்டை விட்டு வேலைக்கு சென்ற அவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதனால் பதற்றம் அடைந்த அவரது தந்தை ரவிச்சந்திரன் அக்கம் பக்கம் மற்றும் அறிந்தவர்கள் என எல்லோரிடமும் விசாரித்தும் தேடியும் மகள் கிடைக்காததால் மணவாளன் நகர் காவல் நிலையத்தில் மகளை கண்டுப்பிடித்து மீட்டு தரும்படி புகார்மனு அளித்து அதில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் மணவாளன்நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் காணாமல் போன செல்வி அமலாவை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.