ஆர்.கே.பேட்டை, டிச. 12 –
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிசம்பர் 14 அன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருத்தணி வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இவ் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி தலைமை தாங்கினார். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் பி.பழனி ஆர்.கே.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலர், ஆர்கே பேட்டை கிழக்கு செயலாளர் P.பழனி, ஒன்றிய இளைஞரணி எ. ஏழுமலை, தகவல்துறை தருமன், ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னணியினர் உள்ளிட்ட ஏராளமான திமுக உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் முதலமைச்சரின் வருகை, கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு பொருள்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.